SHARE

திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை காயப்படுத்தியமை மற்றும் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email