SHARE

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு இந்த மாணவர்கள் சென்றிருந்த நிலையில்,இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என்றும் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email