SHARE

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி கண்டனப் பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தினம் விடுமுறை என்பதால் வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து வடக்கு கிழக்கு காணாமல் போனோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலா தேவி கருத்து தெரிவிக்கையில்

கொக்குத்தொடுவாய் மனித புதை குழி அகழ்வு தொடர்பான ஒரு விழிப்புணர்ச்சியையும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்குமான நடவடிக்கையுமாகவே மேற்படி கண்டனப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுர்வதேசத்தின் மேற்பார்வையுடன் அவர்களின் பங்களிபபுடன் குறித்த அகழ்வுப்படி இடம்பெற வேண்டுமென்று கோரி நிற்கின்றோம் என்றார்.

Print Friendly, PDF & Email