SHARE

செய்திகள் களத்திலிருந்து – மனோராஜன் டிலக்சன்

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இன்று பிரித்தானிய புலம் பெயர் தமிழர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்று முற்பகல் அவர் தங்கியிருந்த IHG Continental Park Lane Hotel முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான தமிழர்கள் தொடர்ந்து மாலை ரணிலின் உத்தியோக பூர்வ சந்திப்பு இடம்பெற்ற வெஸ்மினிஸ்டர் One Great George Street முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட தமிழர் தாயகத்தின் முன்னாள் பொருளியர் ஆய்வாரள் திரு பாலா மாஸ்டர் அவர்கள் குறித்த எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் நமது ஈழநாட்டிற்கு கருத்து தெரிவித்தார்.

அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு தீர்வு காணாது இழுத்தடிப்புச் செய்யும் இனப்படுகொலையாளி ரணில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களுக்கிடையே தமிழ் அமைப்புகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்த ஒரு நரித்தந்திர விஜயத்தினை மேற்கொண்டு இங்கு வந்துள்ளார். அதே நேரம் தாயகத்திலும் தமிழ் தேசிய கட்சிகளை பிளவுபடுத்தி பிரித்தாழும் தந்திரத்தினை மேற்கொள்ளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் எமது எதிர்பை தெரிவிக்கின்றோம் என அவர் கூறினார்.

Print Friendly, PDF & Email