SHARE
image_pdfPRINT

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளையும் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.