SHARE

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு பதவியை இராஜினாமா செய்யுமாறு நேற்று (27) இரவு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி. திவரத்னவுக்கு மீண்டும் ஒருமுறை குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட உறுப்பினர்களான பத்திரன மற்றும் திவரத்ன ஆகியோருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email