SHARE

கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு என தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் வடமாகாண ஆளுநருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள் சார்பில் இன்று வடக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது

இந்த மகஜரை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கையளித்தார்.

Print Friendly, PDF & Email