SHARE
image_pdfPRINT

ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் சில விசேட பொலிஸ் குழுக்களும் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் காருக்குள் இருந்து மீட்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார்.

இவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா ஷாப்டரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.