SHARE

மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இவை அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு ஏற்பாட்டுக் குழுவினர் சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர்  தங்களது அதிருப்தியினையும் கவலையினையும் வெளியிட்டனர்.

மேலும் கடந்த 15.11.2022 ஆம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நினைவேந்தல் பதாதை இதேபோன்று அகற்றப்பட்டிருந்ததைமை குறிப்பிடதக்கது.

Print Friendly, PDF & Email