– பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவர் சேர். எட்வேட் டேவி (Rt. Hon. Sir Ed Davey MP) கண்டனம் –
பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கும் அதன் அனைத்துலக வர்த்தகக் கொள்கைக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பில் கூட்டு விசாரணையொன்றை ஆரம்பிக்கக்கோரி பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவாரான சேர். எட்வேட் டேவி கடிதம் ஒன்றை கடந்த 9ம் திகதி அனுப்பி வைத்துள்ளார். மக்களவையின் வெளிவிகாரத் தெரிவுக்குழுத் தலைவர், அலிசியா கார்ன்ஸ் (Alicia Kearns MP, Chair of the Foreign Affairs Commons Select Committee) அவர்களுக்கும் அதன் அனைத்துலக வர்த்தக தெரிவுக்குழுத் தலைவர் அங்னஸ் மைக்நீல் (Angus MacNeil MP, Chair, International Trade Commons Select Committee)அவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப்பபட்டுள்ள அக்கடிதத்தில் பிரித்தானியா நீண்டகாலமாகவே உலகில் மனித உரிமைகளைப் பாதுகாத்து வந்துள்ளது என்றும், அதற்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும், அதனால் உலகளவில் மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாப்பதில் எமது வெளிவிவகாரக் கொள்கைளும் அனைத்துலக வர்த்தகக்கொள்ளையும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா தொடர்பில் எங்கள் நாடு கடைப்பிடித்துவரும் கொள்கைகள் தொடர்பில் தனது தொகுதியில் வாழும் மக்கள் கவலையடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பிரித்தானியா அரசாங்கம் நீண்டகாலமாகவே சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பாக தனது கரிசனையினைத் தெரிவித்து வந்தது என்றும், இருந்தபோதிலும் இன்று அந்நாட்டிற்கு GSP + வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் வர்த்தக அமைச்சராக இருந்த 2010-2012 காலப்பகுதியில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்காவுக்கு வரிச்சலுகை வழங்காதிருப்பதை தான் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததைச் சுட்டிக்காட்டிய சேர்.எட்டேட் டேவி அவர்கள், துரதிஸ்டவசமாக 2015-2016 இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரித்தானியாவும் சிறிலங்காவுக்கு இவ்வரிச்சலுகையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யா, சீனா தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் எழுந்துள்ள விளைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிரித்தானியாவில் வெளிவிவகாரக் கொள்கையும் அதன் அனைத்துலக வர்த்தகக்கொள்கையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
Angus MacNeil MP
அக்கடிதத்தின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
09.11.22