SHARE

மன்னாரில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்திற்கு முன்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ், மன்னார் பொது அமைப்பு ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் என பலர் கலந்து கொண்டனர்.

நீதி இல்லாத நாட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் எதற்கு?, ஓ.எம்.பி.அலுவலகமே மன்னாரை விட்டு வெளியேறு என்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அவர்கள் கண்டனம் வெளியிட்டனர்.

Print Friendly, PDF & Email