SHARE

புலம்பெயர் நாடுகளில் அகதித்தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பப்படும் நபர்கள் பயங்கரவாத விசாரணைப்பிரிவினராலும் இராணுவப்புலனாய்வாளர்களினாலும் இன்றும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என இலங்கை மனித உரிமைகள் சட்டத்தரணியும் அகதிகள் சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான லக்ஷ்மண் சஞ்சீவ் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்திருந்த அவர் நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email