SHARE

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் பெறுமதியான கஞ்சாவை தொண்டைமனாறு வீதி வளலாய்ப் பகுதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 31 மற்றும் 32 வயதுடைய மன்னார் மற்றும் மானிப்பாய் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. இதன்போது கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹயர்ஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாகனத்தில் இருந்த 51 கிலோ 500 கிலோ கிராம் கஞ்சாவும் இதன்போது மீட்கப்பட்டது. நீண்ட காலமாக வளலாய் கடற்பரப்பு ஊடாக கஞ்சா கடத்தப்படுவது தொடர்பில் தகவல் கிடைக்க பெற்று வந்திருந்ததன் அடிப்படையில் கடற்படையினர் இந்த கஞ்சா கடத்தலை முறியடித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் சந்தேக நபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த அச்சுவேலி பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email