SHARE

நாட்டில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியை விலகுமாறு கோரி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் கூடி இதுகுறித்து ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.

எனினும், எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Print Friendly, PDF & Email