SHARE
image_pdfPRINT

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பஸில் ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிப்பது கீழ்த்தரமான விடயம் எனவும் அவர் ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார்.