புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக அமைச்சரவையை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்மைய, புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று (04) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இன்று (5) இந்த பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.