SHARE

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளுராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மின்சாரத்தை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

அத்தோடு மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email