SHARE

பொன்னாலை – மாதகல் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் இன்று காலை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் சடலமாக உள்ளவரின் முகம் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் பூமிபாலன் (வயது 45) என்ற 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலமானது மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email