SHARE

ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றாக முடக்கி பாரிய போராட்டமொன்றை யாழ். மாவட்ட மீனவர்கள் இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

இந்திய மீன்வர்களின் அத்துமீறலை கண்டித்து நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக மீனவர்கள் போராடி வருகின்றனர்.

எனினும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்காத நிலையில் இன்று குடாநாடு முழுவதும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்து மீறும் செயற்பாட்டுக்கு எழுத்து மூலமான தீர்வை, உரிய அதிகாரிகள், அமைச்சர் தரும் வரையில் போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீர்வு கிடைக்காவிட்டால் நாளைய தினமும் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்ற விடாமல் போராட்டம் கடுமையாக இருக்கும் என்றும் மீனவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Print Friendly, PDF & Email