SHARE

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ள நிலையில் தடை குறித்து பிரித்தானியாவும் பரிசீலிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழிற் கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் நேற்று அமெரிக்காவின் பயணத் தடை குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரியுள்ளார்.

இந்த தடைகளின் தாக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு செய்தீர்கள் என பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளரிடம் அவர் வினவியுள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில், போர்க்குற்றங்களை மேற்கோளிட்டு ஜெனரல் சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email