முல்லைத்தீவில் காணாமல் போன 13 வயதான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி முதல் காணாம ல் போயிருந்த நிலையிலேயே குறித்த சிறுமியின் சடலம் இன்று மூங்கிலாறு பகுதியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணம் குறித்த உண்மை நிலை காணப்படாத அதேவேளை, நீதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் இடம் பெற்றதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.