SHARE

தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். நகரை ஒரு அழகிய நகரமாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதும் வடக்கு மாகாண சபையினால் அது முடியாது போனது என அவர் குறிப்பிட்டார்.

தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நகரை அழகாகக் கொண்டு வருவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தனிப்பட்ட அல்லது அரசியல் கட்சி ரீதியான காழ்ப்புணர்ச்சி காரணமாக நல்ல விடயங்களை செய்வதற்கு தடையை ஏற்படுத்தக் கூடாது என அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

எனவே மீண்டும் ஒருமுறை வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் ஆட்சி அதிகாரம் அரசாங்கத்தின் பக்கம் சென்றுவிடும் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email