SHARE

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இழுவை படகு தொழிலை தடைசெய்ய வேண்டும். என தொிவித்திருந்த கருத்தை கண்டித்து யாழ்.குருநகரில் கறுப்புகொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டித்துள்ளனர்.

இன்று(26/10)  காலை தொழிலுக்கு செல்லாமல் கறுப்பு கொடிகளுடன் மீனவர்கள் ஹர்த்தால் அனுட்டித்துள்ளதுடன் குருநகரில் சகல வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கின்றது. மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் கொடும்பாவியும் கட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இழுவை படகு தொழிலை தடைசெய்யக்கோரி மீனவர்களுடன் இணைந்து போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குருநகர் இழுவை படகு தொழிலாளர்களின் ஒழுங்கமைப்பில் இந்த ஹர்த்தால் நடைபெறுகிறது.

Print Friendly, PDF & Email