SHARE

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்று (சனிக்கிழமை) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று (வெள்ளிக்கிழமை) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

Print Friendly, PDF & Email