SHARE

இலங்கை தழிரசுக் கட்சியில் இருந்து இரண்டாவது கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சிக்குள்ளிருந்து இரண்டாவது கடிதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும் குறித்த கடிதத்தில் தமிழரசு கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பிரமுகர்களின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஆதவன் செய்திப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினரிடம் வினவியபோது இரண்டாவது அறிக்கையில் கையொப்பமிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email