SHARE

ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம்,  29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பெண் 2009 ஆம் ஆண்டு முதல் 2020 வரை ரிஷாட்டின் வீட்டில் வேலை செய்துள்ளார். தற்போது களனி பகுதியில் வேலை செய்யும் நிலையிலேயே அவரிடம் நேற்று வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணியாற்றிய 11 பெண்கள் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் அதிகளவானோர் குறைந்த வயதினை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.   

Print Friendly, PDF & Email