SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம்- அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த குழுவொன்று, அங்கிருந்த இளைஞன் மீது வாள் வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த இளைஞன், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மேலும் இந்த வாள்வெட்டுக் குழு, வீட்டிலிருந்த பொருட்களையும் உடைத்து நொருக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.