SHARE
image_pdfPRINT

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, தமிழ் மக்கள் சார்பான நலன்கள் தொடர்பாகவே அதீத அக்கறை கொண்டவர் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவை முன்னிட்டு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க மக்களின் புனிதவாரம் அனுஷ்டிக்கப்படும் இந்த வாரத்தில் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இறையடி சேர்ந்தமையானது அவரின் இறை வாழ்க்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயர் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற போதும், இறைபணியுடன் சேர்த்து தமிழ் மக்கள் சார்பாகவும் நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் நேரிய வழிகாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.