SHARE

யாழ். – கொழும்பு ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளன என யாழ்ப்பாண ரயில் நிலையம் அதிபர் த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (18) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் புறப்பட இருக்கின்றன. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு,யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி ரயிலும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ் தேவி ரயிலும் சேவையில் ஈடுபடவுள்ளன.

அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ் தேவி ரயிலும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் இன்று சேவையை ஆரம்பிக்கின்றன.

ஏனைய சேவைகள்எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில், இரவு தபால் ரயில் உட்பட அனைத்து சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றன.

பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். 
அத்துடன், உங்களுக்குத் தேவையான விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பினைமேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ரயிலில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.

Print Friendly, PDF & Email