SHARE

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகளை விசாரிப்பதற்கு சுகாதார அமைச்சு விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தமது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சின் தலைமை கணக்காளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இவ்விசாரணைகள் நீதியான முறையில் மேற்கொள்ளப்படுவதோடு பணிப்பாளர் பவாணி பசுபதிராசாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email