SHARE

விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகள் மீதான பிரி;த்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த தடையை அரசு நீக்கவேண்டும என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (16) பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh எம்.பி.யுடன் Zoom ஊடகம் மூலம் கலந்துரையாடலை மேற்கொண்ட வினோதன் காந்தலிங்கம் தலைமையிலான செயற்பாட்டாளர் குழுவினர் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

மேற்படி கலந்துரையாடலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரட்ணம், மற்றும் செயற்பாட்டாளர்களான கார்தீபன் யோகமனோகரன், அரவிந்தராஜ் நல்லதம்பி, கதாதரன் நாகராஜ், சாருப்பிரியன் சசிகரன், கீதரன் ராசேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்

விடுதலைப்புலிகள் கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டார்கள். அதன் பின்னர் 2009 இல் இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த 2018 இல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) விடுதலைப்புலிகளை தடைப்பட்டியிலிருந்து நீக்க வேண்டும் என கோரி பிரித்தானியாவின் உள்நாட்டு அலுவலகத்திற்கு (Home Office) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தனர்.

அந்த கோரிக்கையை பரிசீலனை செய்த உள்நாட்டு திணைக்களம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாங்கள் விடுதலைப்புலிகளை தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்போவதில்லை என்ற தமது தீர்வை அறிவித்தார்கள்.

இதனையடுத்து அந்த முடிவுக்கு எதிராக நாடுகடந்த அரசாங்கம் Proscribed Organistion Appeal Commission எனும் நீதிமன்றிடம் மேன்முறையீடு செய்தார்கள். குறித்த மனு மீதான விசாரணை கடந்த ஜீலை மாதம் நீதிமன்றினால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் உள்நாட்டு அலுவலகம் சரியான ஆதாரங்களை பரிசீலனை செய்யவில்லை என்றும்; கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை சரியாக ஆராயவில்லை மற்றும் சிறந்த முறையில் அறிக்கைப்படுத்தவில்லை அதையொட்டிய சரியான முடிவுகளை அவர்கள் பெறவில்லை. அதனால் அவர்கள் எட்டிய முடிவு சட்டத்துக்கு புறம்பானது என்று கூறி உள்நாட்டு திணைக்களத்தின் தடை முடிவை நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி நீதிமன்றம் வுபுவுநு யின் கோரிக்கையை ஏற்றுகொண்டது.

இந்த தீர்ப்பை நீதிமன்றம் இரு வகையில் அமுல்படுத்தும். அதில் ஒன்று உள்நாட்டு அலுவலகத்தை மீள் பரிசீலனை செய்யும் படி உத்தரவு வழங்கலாம். அல்லது அவர்கள் தடையை எடுக்க வேண்டும் அதற்கான ஒரு ஆணையை பாராளுமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிடலாம். இவ்வாறு இரு வகையான உத்தரவுகளை வழங்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது.

இந்நிலையிலேயே தடையை நேரடியாக நீக்குமாறு உள்நாட்டு திணைக்களத்திற்கும் அழுத்தம் கொடுக்குமாறு அல்லது பாராளுமன்றில் குறித்த விவகாரம் தாக்கல் செய்யப்படுமாயின் அதில் தமிழ் மக்கள் சார்ப்பாக தடையை நீக்க கோருமாறு குரல் கொடுக்குமாறும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் தமிழ் செயற்பாட்டாளர்கள் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்படி வழக்கினை முன்னெடுத்திருந்த போதிலும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாமாகவே முன்வந்து குறித்த தடை நீக்கத்திற்கு ஆதரவாக செயற்பாடுகளை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email