கொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கையில் இருவர் தற்கொலை செய்துள்ளனர். அகலவத்தை மற்றும் ஜா-எல பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தனது மகள் மற்றும் மருமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜா எல பகுதியில் 72 வயதான ஒரு பெண் தற்கெலை செய்து கொண்டுள்ளார்.
ஜா-எல பொலிஸ் பிரிவிலுள்ள ஏகல பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து உடல் மீட்கப்பட்டள்ளது.
அகலவத்தை பகுதயில் 56 வயதான ஒருவர் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தன்னை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
பலியானவர் நாகொட மருத்துவமனையில் இணைக்கப்பட்ட தனியார் பஸ் டிரைவராக பணியாற்றியதாக கூறப்படுகிறது. களுத்துறையில் தனியார் பேருந்து சாரதியாகவும் பணியாற்றினார்.
பேருந்தில் பயணித்த ஒருவர் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக அவருக்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை வீட்டிற்கு எதிரேயிருந்த மரத்தில் தூக்கிட்டுள்ளார்.