SHARE

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் இளைஞரொருவரைக் கடத்தி அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வடமராட்சி – வரணிப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

வேலைக்குச் சென்றுவிட்டு பஸ்ஸில் வந்து, சுட்டிபுரம் பகுதியில் இறங்கிய இளைஞனை, அங்கு நின்ற இனந்தெரியாத கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன் போது காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செந்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலதிக வுசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email