SHARE

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி யான் ஓயா காட்டுப்பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று நேற்று (19) மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

யான் ஓயாப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று உள்ளது என தேன் எடுக்கச் சென்ற சிலர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தை மீட்டுள்ளனர். 

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email