SHARE
image_pdfPRINT

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவிடத் திடலில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அரசியல்வாதிகள், மத குருக்கள் மற்றும் உறவுகளை இழந்தவர்கள் என பெருமளவு மக்கள் சமூக இடைவெளியை பேணி கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிள்ளைகள் இருவரையும், கணவனையும் இழந்த தாய் ஒருவர் பொது சுடரை ஏற்றினார்.

இதேவேளை நிகழ்வுக்கு சென்ற பலர் பரந்தனில் வைத்து இராணுவத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.