SHARE

2005ம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா – ஏ9 வீதிக்கு அருகே போராட்டப் பந்தல் அமைத்து சுழற்சி முறையில் 1,167 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர்.

இதன்போது மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Print Friendly, PDF & Email