SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் – ஓட்டுமடம், வயல்கரை வீதி பகுதியை சேர்ந்த சிறிசிவகுமார் சிவிதரன் (25) என்ற இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் அவர் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது போதனா வைத்தியசாலையில் குவிந்த உறவினர்களால் வைத்தியசாலை வளாகத்தில் சிறிது நேரம் பதட்டமான நிலை காணப்பட்டது.