SHARE

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள  அஞ்சல் மூல வாக்களிப்ப்பின் போது, தமது முடிவின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க ஜந்து தமிழ் தேசிய கட்சிகளதும் கூட்டு கோரியுள்ளது.

தகுதிபெற்ற அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்குரிமையை தவறாது பயன்படுத்துமாறும அது கோரியுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்த இறுதி தீர்மானம், அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிவந்தப்பின்னர் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மற்றும் கிழக்குப் பல்கலை மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாகப் பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள், ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் நிலைப்பாடு தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள விடுதியொன்றில் நடைபெற்றிருந்தது.

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கொள்கை பரப்புரை செயலாளர் க.அருந்தவபாலன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழரசு கட்சியின் செயலாளர் தி. துரைராஜசிங்கம், வடமாகாணசபை அவைத் தலைவரும், தமிழரசு கட்சி உறுப்பினருமான சீ. வீ.கே. சிவஞானம், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் பொதுச் செயலர் சிறீகாந்தா, ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையிலேயே மீண்டும் ஒன்று கூடி ஆராய்வதாக தெரிவித்து கலைந்து சென்றுள்ளனர். 

Print Friendly, PDF & Email