SHARE

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் நாவாந்துறை, ஐந்து சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதுடன்,இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடுதல் இடம்பெற்று வருகின்றது.

இதில் நால்வர் கைதுசெய்யப்பட்டதாக அறியமுடிந்தது.

Print Friendly, PDF & Email