SHARE
image_pdfPRINT

வத்தளையில் ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புர்கா அணிந்த ஒருவர் வத்தளை பகுதியில் சென்றுள்ள குறித்த நபரின் நடவடிக்கை மீது, பொதுமக்களுக்கு சந்தேகம்  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சுற்றிவளைத்த மக்கள் சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் யோசனையை கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து, இதனை எச்சரிக்கும் வகையிலான இரு தொலைபேசி அழைப்புகள் குறித்த,  பாராளுமன்ற உறுப்பினருக்கு வந்துள்ளதாகவும் தகவல் ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது.