சந்தேகத்திற்கிடமான வாசகங்கள் ஒட்டப்பட்ட தலைக்கவசத்துடன் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு ஆகியவற்றில் சந்தேகத்துக்கிடமாக வாசகங்கள் ஒட்டப்பட்டபடி நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சற்று முன்னர் கொழும்பு டுப்பிளிடகேசன் வீதியில் பயணித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.