SHARE

கொழும்பு கொச்சிககடை பகுதியில் சற்று முன்னர் மீண்டுமொரு குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு,கொச்சிக்கடை பகுதியில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் வேனொன்றில்இ காணப்பட்ட பொதியொன்றினை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

அந்த பொதியினை சோதனையிட்டபோது அதிலிருந்து குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பின்னர் அதனை அவர்கள் பாதுகாப்பாக வெடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கொச்சிக்கடைக்கு அண்மையில் மீண்டும் பாரிய வெடிச்சத்தம் கேட்டமையினால் அப்பகுதியில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email