கணவன் தினமும் மது அருந்திவிட்டு தன்னையும் 6 பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்தி வருவதால் தனக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு 37 வயதுடைய பெண் காவல்நிலையதில் பாதுகாப்புத் தஞ்சம் கோரியுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் காவல்நிலையதில் இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் தனது 4 பெண் பிள்ளைகள் உட்பட 6 பிள்ளைகளுடன் பாதுகாப்புக் கோரியுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் ஆறுபிள்ளைகளையும் தாயையும் சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.