SHARE

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (வயது – 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

சிறுவன், கடந்த முதலாம் திகதி விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது அவருக்கு குருதி இழப்பு ஏற்பட்டதாக குருதி ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குணமடைந்து வந்த சிறுவன் மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதன்போது சிறுவனின் கிட்னி பகுதியில் குருதிக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17ஆம் திகதி சிறுவன் அசைவற்று காணப்பட்டதை அவதானித்த பெற்றோர், மருத்துவரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்னர்.

இந்நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு குருதிப் பிரிவு மாற்றி ஏற்பட்டப்பட்டுள்ளதாகவும் அதனால் இரு கிட்னியும் பாதிக்கப்பட்டு அவர் இஙறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email