SHARE
image_pdfPRINT

கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் மண் ஏற்றச்சென்றவர்கள் மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள்.

கடந்த செவ்வாய் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டாவளைப்பகுதியில் ஆற்று மண் ஏற்ற சென்றவர்களை மறித்த படையினர் மணல் ஏற்றுவதாக இருந்தால் பணம் கொடுத்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள் இதனை மறுத்தவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

இதனால் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள் நாள்தோறும் கண்டாவளைப்பகுதியில் சிறீலங்காப்படையினர் ஏதோஒருவகையில் மக்களுக்கு தொல்லைகொடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.