SHARE

சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்க ஜனாதிபதி முன்னிற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படைத்துறைப் பதவிகளில் மிக உயரியதாக மதிக்கப்படும் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கும் அதிகாரத்தை முப்படைகளினதும் தளபதியான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருக்கிறார்.

இந்நிலையிலேயே இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புபட்ட மேற்படி கடற்படை தளபதிக்கு ஜனாதிபதியினால் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே, இறுதிப்போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email