SHARE
image_pdfPRINT

யாழ்.சிறுவர் நீதிமன்றுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டுக்குள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கபட்டு உள்ளது.

யாழ்.கொய்யாத்தோட்டத்தை சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கடற்தொழில் செய்பவர் எனவும் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.