SHARE
image_pdfPRINT

யாழ். பண்ணை பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கபட்டு உள்ளன.

யாழ்ப்பாண பொலிசாருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டன.
பண்ணை பகுதியில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் இருந்து ஒரு தொகை சி – 4 வகை வெடி மருந்துக்களை தாம் மீட்டதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.