SHARE

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email