SHARE

மன்னார் எமிழ் நகர் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸார் குடும்பத்தலைவரை சரமாரியாக தாக்கி கைது செய்ததுடன் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாணிக்கம் இளையதம்பி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்வரும் அவரது மனைவி இளையதம்பி சுந்தரியும் வசித்து வந்த காணியை அபகரிக்கும் நோக்குடனே நேற்று முன்தினம் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கைது செய்யப்பட்டவரின் மகனான கலைவாணன் புலம்பெயர் தேசமொன்றில் தொடர்ந்தும் புலி ஆதரவாளராக செயல்பட்டு வருவதாகவும் அதனனை நிறுத்தும்படி கூறுமாறு பெற்றோர்களுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வந்திருந்த கூறப்படுகின்றது.

இதனால் புலம்பெயர் தேசத்தில் உள்ள அவர்களது மகனின் செயற்பாடுகளை நிறுத்த பெற்றோர்கள் மீது பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளிடப்பட்டுள்ளது.

குடும்பத்தலைவர் மீதும் அவரது மனைவி மீதும் பொலிஸார் மிலேட்சத்தனமான தாக்குதல் நடத்துவது அங்குள்ள சி.சி.ரீ.வி கமெராவில் பதிவாகியுள்ளது.

Print Friendly, PDF & Email